spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நெற்றியில் உள்ள கருமையை போக்க சில டிப்ஸ்!

நெற்றியில் உள்ள கருமையை போக்க சில டிப்ஸ்!

-

- Advertisement -

நெற்றியில் உள்ள கருமையை போக்க சில டிப்ஸ்!என்னதான் என்னதான் நம் முகத்திற்கு பேசியல், பல அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தினாலும் நெற்றியின் கருமை என்பது அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. சூரிய ஒளியின் தாக்கத்தாலும், ஹார்மோன் குறைபாடுகளாலும் நெற்றியின் நிறம் கருமையாக மாறிவிடுகிறது. அந்த வகையில் தற்போது சில இயற்கையான டிப்ஸ்களை பின்பற்றி பார்க்கலாம்.

அண்ணாச்சி பழத்தை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து நெற்றியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் நெற்றியின் கருமை நிறம் மறையும்.

we-r-hiring

வெண்ணெய் மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, அதனை நெற்றியில் சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வந்தால் கருமை நிறம் மறைந்து பொலிவாக தெரியும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வரலாம்.

இரண்டு ஸ்பூன் அளவு சந்தனத்தூள், சிறிதளவு இளநீர் ஆகியவற்றை பேஸ்ட் பதத்திற்கு கலந்து, முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய்களை வட்டமாக நறுக்கி அதனை நெற்றியில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் நெற்றியில் உள்ள கருமை மறைந்து சருமம் பொலிவாகும்.நெற்றியில் உள்ள கருமையை போக்க சில டிப்ஸ்!

காய்ச்சாத பால் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதில் கடலை மாவு சேர்த்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து கழுவி வர வேண்டும். இவ்வாறு செய்வதினால் நெற்றி மட்டுமில்லாமல் முகத்தில் உள்ள கருமையும் மறைந்து சருமம் பொலிவடையும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ