கீழாநெல்லி இலை மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தேமல் இருக்கும் பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி வர தேமல் மற்றும் கரும்புள்ளி ஆகியவைகள் மறையும்.
சுக்கு, துளசி இலை ஆகியவற்றை நன்கு அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறையும்.
மஞ்சளை இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு தேமல் மீது தேய்த்து வர தேமல் குணமடையும்.
துளசி இலை, வெற்றிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து அதனை நன்கு அரைத்து தேமல் மேல் பூசினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சம் பழத்தின் தோலை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனை சிறிது தண்ணீர் ஊற்றி குழைத்து தேமல் மீது பூசி வர தேமல் சரியாகும். இது போல கமலா ஆரஞ்சின் தோலையும் பொடியாக்கி பயன்படுத்தலாம்.
பூவரச மரத்தில் உள்ள காய்களை அம்மியில் உரசி அதிலிருந்து வெளியேறும் மஞ்சள் நிற பாலை தேமல் உள்ள பகுதிகளை பூசி வர முகத்தில் உள்ள தேமல் காணாமல் போய்விடும்.
இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.