புருவ முடிய அடர்த்தியாக வளர சில டிப்ஸ்!
பொதுவாக பெண்கள் பலரும் நம் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டுமென பல முயற்சிகளை எடுப்பார்கள். அதில் ஒன்றுதான் புருவ முடி. சிலருக்கு இயற்கையிலேயே புருவ முடி அடர்த்தியாக இருக்கும். ஆனால் சிலருக்கு அப்படி இருக்காது. எனவே பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று தங்களின் புருவ முடியை அழகாக மாற்றுவதுண்டு. ஆனால் தற்போது வீட்டில் இருந்தபடியே புருவ முடியை அழகாக மாற்றலாம். அதற்கான வழிமுறைகளை தற்போது பார்க்கலாம்.

முதலில் கற்றாழையை சீவி அதிலுள்ள ஜெல்லை எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் தூங்குவதற்கு முன்பாக இந்த கற்றாழை ஜெல்லை புருவங்களில் தடவி காலையில் எழுந்தவுடன் கழுவ வேண்டும். எப்படி செய்வதால் புருவ முடி அழகாக அடர்த்தியாக வளரும்.
அடுத்தது தினமும் தூங்க செல்வதற்கு முன் பாதாம் எண்ணையை புருவத்தில் தடவலாம். இதனையும் இரவு முதல் அப்படியே வைத்திருந்து காலை எழுந்தவுடன் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெயை புருவங்களில் தடவுவதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். எனவே வேறு நன்கு வலுவடைந்து முடி அடர்த்தியாக வளரும்.
அதேபோல் விளக்கெண்ணையை புருவத்தின் மீது தடவலாம்.
நீரில் ஊற வைத்த வெந்தயத்தை நன்கு பேஸ்ட் ஆக அரைத்து அதனை புருவத்தின் மீது தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனை வாரத்துக்கு இரண்டு முறை செய்தால் புருவ முடி அடர்த்தியாக வளரும்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.