பரமக்குடியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மீனவங்குடி கிராமத்தில் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்த 16 பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் காலை உணவு முடித்த பின்பு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.தற்போது மாணவ மாணவிகள் நலமாக உள்ளனர். உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் மாணவிகளிடம் நலம் விசாரித்து வருகிறார்.