spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிரடி நடவடிக்கை – பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்

அதிரடி நடவடிக்கை – பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்

-

- Advertisement -

பாமகவின் செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.  செயல்தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை என ராமதாஸ் அறிவித்துள்ளாா்.அதிரடி நடவடிக்கை – பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார், அப்போது”  பாட்டாளி மக்கள் கட்சியின் 1.9.2025 ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததின் முடிவின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பி வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இருமுறை அவகாசம் கொடுத்தும் எழுத்து பூர்வமாகவோ நேரில் வந்தோ விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

அன்புமணி மீது சொல்லப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் உண்மையானவை என கருதப்பட்டதாக ராமதாஸ் விளக்கமளித்தாா். அன்புமணி தோன்றி தனமாக தகுதியற்ற அரசியல் வாதி என்பதை நிரூபித்துள்ளதாகவும், கட்சியை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவருவதால் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

we-r-hiring

அன்புமணியை நீக்கியதன் மூலம்  கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது. கட்சி விரோத நடவடிக்கையில் பிற்காலத்தில் எவரேனும் ஈடுபட்டால் இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

கட்சி அமைப்புகள் விதிகள், ஜனநாயக விதிப்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அன்புமணி உடன் உள்ளவர்கள் தனி கட்சியாக செயல்படுவதை போல் இருக்கின்றனர். அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்க தாயாரக உள்ளேன். அன்புமணியுடன் உள்ள பத்து பேருக்கும் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் உதவி செய்து வளர்த்துவிட்டனர். வளர்த்து விட்டவர்களை யாரென்று சொல்ல விரும்பவில்லை.

மூத்தவர்கள் நான்கு ஐந்து பேர் அன்புமணிக்கு அறிவுரை கூறியபோது அதை கேட்காமல் அன்புமணி செயல்பட்டார். மரியாதைக்குரிய பழ கருப்பையா தந்தையிடம் மகன் தோற்பது தோல்வி அல்ல  தந்தை சொல்லை கேட்டு நடந்து கொள்ள வேண்டும். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என அழகாக பழ கருப்பையா தெரிவித்திருக்கிறார்.

பாமகவை 45 ஆண்டுகள் ஓடி ஓடி உழைத்து ராந்தல் விளக்கில் கஞ்சியோ கூழோ குடித்து 96 ஆராயிரம் கிராமங்கள் சென்று கஷ்டப்பட்டு பாமகவை உருவாக்கி வளர்த்தேன். இந்த கட்சியில் சேறுகிறவர்கள், சேர்ந்த பிறகும் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டன. அரசியல் பயிலரங்கமும் தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறேன்.  அதிலேயே அன்புமணிக்கு நம்பிக்கை இல்லை, ஆதரவும் இல்லை என கூறினார்.

அன்புமணி தனியாக கட்சியை அன்புமணி ஆரம்பித்து கொள்ளலாம். உனது விருப்பம்போல் தனி கட்சி ஆரம்பித்து கொள்ள மூன்று முறை தெரிவித்துள்ளேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.  ராமதாஸ் தனி மனிதனாக ஆரம்பித்த கட்சியில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை.  அது பிள்ளையாக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும் கட்சி விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டு முறை விவாதித்து கடிதம் அனுப்பட்டது. அதற்கு கடிதத்தை பெற்றுகொண்டு பதில் ஏதும் அளிக்காததால் இந்த முடிவை தெரிவிப்பதாக கூறினார்.

அன்புமணியை நீக்கிய முடிவு பாமகவிற்கு பின்னடைவு கிடையாது, பயிர் செய்தால் களை முளைக்க தான் செய்யும் அதனால் பயிர் செய்யாமல் இருக்க முடியாது, கட்சியின் வளர்ச்சிக்கு குந்தமாக இருந்த அன்புமணியை நீக்கிவிட்டேன், அன்புமணி கட்சியை தொடங்கினாலும் அந்த கட்சி வளராது என தெரிவித்தார்.

இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் முடிக்க விடல் என்ற குறளை சுட்டிக்காட்டிய அவர் தன்னோடு 40 முறை பேசியதாக அன்புமணி கூறுவது பொய். அன்புமணி சொல்வதெல்லாம் பொய்.

அண்ட புலுகு ஆகாச புலுகு வடிகட்டிய பொய் என பல்வேறு கட்சியினர் தெரிவிப்பார்கள் என்னுடைய மனம் எவ்வளவு வருந்திருக்கும் என்பது என்னையே உளவு பார்த்தது யாரை யார் வேவு பார்ப்பது. இதைவிட மோசமான செயல் கிடையாது. இந்த இடத்தில் வேவு பார்க்க என்ன இருக்கிறது. ஆளும் கட்சி எதிர்கட்சி என்னை பிடிக்காதவர்கள் வேவு பார்க்கலாம் அன்புமணி என்னை வேவு பார்க்கலாமா? இது 16 குற்றச்சாட்டுகளில் என் மனசு வருந்திய மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுதான் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என தொண்டர்கள் என்னை கோஷமிட்டு அழைத்தார்கள். ஆனால் அந்த இரும்பே இன்று உருகிவிட்டது. அன்புமணியால் பாமக அழிகிறதே என்பதை மனம் பொருக்காமல் தான் இந்த முடிவு எடுக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளாா்.

உயிர் மூச்சு உள்ளவரை ஜனங்களுக்காக கோல் ஊன்றி பாடுபடுவேன். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க வேண்டுமென காலங்காலமாக சொல்லி வருகிறேன். ஆனால் எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை. அன்புமணியை நீக்குவதன் மூலம் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் மேலும் சிறப்பாக செயல்படுவார்கள்.

அன்புமணியுடன் உள்ள சிலபேர் அன்புமணியை தவறாக வழிநடத்துகிறார்கள்.செயல் தலைவர் பதவியை யாருக்கு எப்போ என்பது தெரிவிப்பேன், தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்பதை தெரிவிக்கவில்லை அது பொய், தலைமை பண்பு அன்புமணிக்கு இல்லை.  செயல் தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை” என திட்டவட்டமாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கானை மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்…. முதல் இடத்தை பிடித்து சாதனை!

MUST READ