Homeசெய்திகள்அரசியல்பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

-

 

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
Photo: ADMK

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (ஜூன் 13) காலை 10.30 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

மகேஷ் பாபு ராஜமௌலி கூட்டணியின் புதிய பட அப்டேட்!

கூட்டத்தில், அ.தி.மு.க.வின் மாநில மாநாடு நடத்துவது குறித்தும், அ.தி.மு.க. குறித்து அண்ணாமலை தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்தும், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சி ரீதியாக புதிய மாவட்டங்களை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கூட்டத்திற்கு பிறகு பா.ஜ.க. உடனான கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை அ.தி.மு.க. தலைமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!

இதற்கிடையே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியக் கருத்தால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ