தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று விரக்தி உச்சத்திற்கு போய் மக்கள் உங்களை பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்கிறார் நாங்களும் சொல்கிறோம் மக்கள் உங்களை பார்த்துக் கொள்வார்கள். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு மாற்றாக திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை அவர்களால் இங்கு கால் பதிக்க முடியாது என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளாா்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மதுரையில் பேசிய பேச்சுகளை அறிவீர்கள். இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அவர் பேசியிருக்கும் பேச்சுக்களின் மொத்த தொகுப்பையும் சுருக்கி சொல்வதாக இருந்தால் அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம் ,பிளவு நோக்கம் கொண்ட சூளுரை இவற்றைத் தவிர வேறு எதையும் அந்த பேச்சில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
உள்துறை அமைச்சருக்கு உள்ள தகுதி, பொறுப்பு, கடமை உணர்ச்சி உள்ளிட்வற்றை கவலைப்படாமல் அவதூறுகளை அள்ளி வீசுவதும் மாற்று கட்சி அரசு அந்த மாநிலத்தில் நடந்தால் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதும், மதவாதம் பிளவை வேண்டுமென்றே உருவாக்கி அமைதியாக இருக்கும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை வேண்டும் என்றே உண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா? அறுவடை செய்யலாமா என்ற அருவருப்பான உணர்ச்சி அவர் பேச்சில் வெளிப்பட்டது.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லதல்ல. மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையில் குந்தகம் விளைவிக்கும் பேச்சை பேசியிருக்கிறார். அவர் பேச்சை ஒவ்வொரு வரியையும் எங்களால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். தமிழ்நாட்டு அமைதி பூங்காவாக இருப்பதை அவர்கள் விரும்பாமல் மிகவும் கீழ்த்தரமாக நடவடிக்கைகளில் மேற்கொண்டுள்ள அவரின் பேச்சை, போக்கை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அமைதி, வளர்ச்சி திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி பல நேரங்களில் கிடைக்காமல் இருந்தாலும் அவற்றை மாநில நிதியில் இருந்து செய்து வளர்ச்சி திட்டப் பணிகளை வேகமாக நல்ல முறையில் வழங்கி நடைமுறைப்படுத்துவதை செரிக்க முடியாத ஒன்றிய அரசும் பிஜேபி கட்சியும் அமித்ஷாவை கொண்டு வந்து இப்படிபட்ட கேலிக் கூத்தான அருவருப்பான அரசியல் நாகரீகத்திற்கு புறம்பான காரியத்தை செய்து இருக்கிறார்கள். அமித்ஷா என்று தனி மனிதனாக மட்டுமல்ல அவர் வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல. இந்த அரசியல் சித்து விளையாட்டுகளை அருவருப்பான போக்கை இதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
கடந்த ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டதை விட அதிகமாக ஆறு லட்சம் வரை நிதி வழங்குகிறோம் என்று பேசியது குறித்து கேள்விக்கு, ”மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மொத்த நேரடி நிதி வருவாய் எவ்வளவு இப்போது எவ்வளவு. நான்கு மடங்கு வரை நேரடி நிதி வருவாய் உயர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ரயில்வேத்துறை அமைச்சரிடம் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ரயில்வேக்கு எவ்வளவு வருவாய் வந்தது எவ்வளவு நிதி அளிக்கப்பட்டது தற்போது எவ்வளவு வருவாய் வந்துள்ளது எவ்வளவு நிதி வழங்கப்படுகிறது.”அமித்ஷாவை பார்த்தால் திமுகவுக்கு பயம் என்று நயினார் நாகேந்திரன் பேசியது குறித்த கேள்விக்கு, ”அமித்ஷாவை பார்த்தால் எங்களுக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும் எங்களை பார்த்து ஷாக் அடித்து தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்த பிளவுவாதமும் மத அரசியலும் இங்கு எடுபடவில்லை. எல்லா தேர்தலிலும் முதலமைச்சரின் கொள்கை ஏற்று மக்கள் திமுக பின் இருக்கிறார்கள். இது உண்மையை புரிந்து கொண்டு ஜீரணித்துக் கொள்ள முடியாமல் தான் வந்து பேசுகிறீர்கள். உங்களைப் பார்த்தால் எங்களுக்கு சிரிப்பாக உள்ளது. ஆட்சியை கலைக்கிறோம் என்று சொன்னபோது நாங்கள் மண்டியிடவில்லையே. மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களா? இப்போதும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. பிரதமர் ஐந்து முறை ஏன் தமிழகத்திற்கு வந்தார். இதற்கு முன் பிரதமர் யாராவது ஐந்து முறை வந்து பார்த்திருக்கிறார்களா யாருக்கு பயம்.”
திமுக தேர்தல் அறிக்கைகள் குறிப்பிட்டு 10 சதவிகிதம் திட்டங்களை கூட நிறைவேற்றவில்லை என்று அமித்ஷா பேச்சு குறித்த கேள்விக்கு, ”திமுகவின் தேர்தல் அறிக்கையை 98.5% நாங்கள் நிறைவேற்றி விட்டோம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மட்டும் தான் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது அதற்கும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறு எதை செய்யவில்லை, சொல்லத்தையும் செய்துள்ளோம்.
டெல்லியில் வெற்றி பெற்றது போல் தமிழகத்தில் வெல்வோம் என்று சொன்னது குறித்த கேள்விக்கு, ”ஊழலை மட்டுமே எதிர்த்து அரசியலுக்கு வந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்குப் பின் அரசியல் தத்துவம் இருந்ததா, தலைவர்கள் இருந்தார்களா ,அமித்சாவையும் மோடியையும் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. அவர்களுக்குப் பின்னிருக்கும் அரசியல் தத்துவம் எல்லா இடங்களிலும் படையெடுத்து வெற்றி பெறுகிறது ஏன் இங்கு வெற்றி பெற முடியவில்லை. ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்திற்கு மாற்று சித்தாந்தம் இங்கு உள்ளது அதனால் அவர்கள் இங்கு வர முடியாது. திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும் வரை அவர்களால் இங்கு கால் பதிக்க முடியாது.
நாங்கள் டெல்லி, ஹரியானா கிடையாது தமிழ்நாடு அதனால் நீங்கள் இங்கு வர முடியாது. தொகுதி மறு வரையறை குறித்த ஏன் பேசவில்லை? எந்த அடிப்படையில் தொகுதி மறு வரையறை வருகிறது. இப்படிப்பட்ட எண்ணம் இல்லை என்றால் 800 கும் மேற்பட்ட இருக்கைகள் வைத்து நாடாளுமன்றத்தை கட்டினீர்கள். பிரதமர் தொகுதி மறுவரையறை செய்த பின்னர் 800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வருவார்கள் என்று பேசியது உண்மைதானே.
தென் மாநிலங்கள் இல்லாமலேயே எந்த மசோதாவையும் அரசியல் சட்ட திருத்தத்தையும் அவர்களால் கொண்டுவர முடியும் என்பது தான் உள்ளிருக்கும் சூது. அந்த சூதை முறியடித்த ஒரே தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். 2027 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நியாயமாக இருக்குமா?, வெளிப்படையாக இருக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு இந்தியாவை பிளவுபடுத்தவும்.
அரசியல் நோக்கத்திற்காகத்தான் முருகனை கையாளுகிறார்கள் என்பது என்ன சந்தேகம், உண்மைதானே வேறு என்ன காரணம். இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவர்கள் நடத்துகிறார்கள் நீங்கள் ஏன் நடத்துகிறீர்கள். இந்து மத ஒற்றுமைக்காகவோ முருகனுக்காகவோ இந்த முருகன் மாநாடு அல்ல மதவாதத்தை ஏற்படுத்த வேண்டும் இஸ்லாமியர்கள் ,கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.
தமிழ் குறித்து அவ்வளவு பேசுகிறீர்கள் கீழடி ஆய்வை ஏன் மீண்டும் மீண்டும் தவிர்த்து வருகிறார்கள். அதேபோல் இரும்பை கண்டுபிடித்த ஐயாயிரம் ஆண்டுகளானது என்று தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தோம் அது இரண்டையும் இவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதற்காக அதிகாரி அமர்நாத் என்பவரை மூன்று முறை இடமாற்றம் செய்கிறார்கள். இவையெல்லாம் தமிழர்களுக்கு தமிழர்கள் கலாச்சாரத்திற்கு திராவிடர்களுக்கு எதிரானவை என்பதை அறிந்து அறியாமலையோ அப்பட்டமாக வெளிக்காட்டி கொள்கிறார்கள் இதற்கான அறுவடையை 2026 தேர்தலில் நிச்சயம் சந்திப்பார்கள்.
தமிழ் மொழியில் பேச முடியவில்லை அது வருத்தமாக இருக்கிறது என்று அமித்ஷா பேசியது குறித்த கேள்விக்கு, ” மற்ற மாநிலங்களின் மொழிகளை இவர்கள் வளர்த்து விட்டார்களா? குஜராத் மொழி பீகார் மொழி எல்லாம் என்ன ஆனது. மற்ற வட மாநில மொழிகள் எல்லாம் எங்கு போனது? வட இந்தியாவில் அந்தந்த மாநிலங்களில் இருந்த மொழிகள் இந்த ஆட்சி வந்த 15 ஆண்டுகளில் இருக்கிறதா.? உலகத்திலேயே இல்லாத இந்தியை கொண்டு வந்து விட்டார்கள் அதற்குப் பிறகு சமஸ்கிருதத்தை கொண்டு வருவார்கள். இல்லாத சரஸ்வதி நதிக்கு இவ்வளவு பணம் பேசாத சமஸ்கிருதத்திற்கு அவ்வளவு பணம்.
இந்தியாவோடு தான் நாங்கள் இருக்கிறோமா எங்களை அங்கீகரிக்க மாட்டீர்களா என்று நாங்கள் தான் கேட்க வேண்டும். எத்தனை முறை மோடி வந்தாரோ அத்தனை சதவிகிதம் நீலகிரியில் வாக்கு வித்தியாசம் இருந்தது. அதுபோல் எத்தனை முறை அமித்ஷா வருகிறாரோ, அவ்வளவு வாக்குகள் எங்களுக்கு அதிகரிக்கும். அவர்கள் வந்தால் தான் எங்கள் 200 என்ற இளக்கை தாண்டி அதிகம் செல்வோம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எல்லாம் அவர்கள் பேசலாமா? பில்கிஸ் பானு வழக்கில் நடந்ததை பார்த்து பிறகு அமித்ஷா இதைப்பற்றி பேசலாமா.? குஜராத்தில் அந்த குற்றவாளிகள் தீர்ப்பை ரத்து செய்து வெளியில் விடும்போது பாஜகவினர் செல்கிறார்கள் இதற்கு அமித்ஷா அனுமதி அளிக்கிறார். மணிப்பூரில் என்ன நிலைமை பிரதமர், ஆளுநர் பதில் சொன்னார்களா? காவல்துறை பாதுகாப்புடன் பெண்களை க் கொண்டு சென்று கற்பழிக்கிறார்கள் அந்த வீடியோ காட்சிகள் வெளியானது முதலமைச்சரை உங்களால் பிடிக்க முடியவில்லை. எத்தனையோ பார்த்துவிட்டு ஊமை போல் அமர்ந்திருந்தார்கள் வெட்கமாக இல்லையா. ”
ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆட்சி அமைப்பது என்று பேசினார் என்ற கேள்விக்கு, ”இதுதான் உண்மையான பிளவு வாதம் ஒரே தேசம் ஒரு இந்தியா என்றால் ஒடிசாவில் யார் வந்தால் என்ன? . அவர் நல்லவரா கெட்டவரா என்பது குறித்து தானே பேச வேண்டும். அங்க போய் ஒரு தமிழர் உங்களை ஆளலாமா என்று கேட்கிறாா். பாரத் மாதா கி ஜே ,ஒரே இந்தியா என்று சொல்ல என்ன தகுதி உள்ளது எல்லாம் பொய்.
ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு மோடியும் அமித்ஷாவும் பகடைக்காய் அது தமிழ்நாட்டில் நடக்காது என்பதால் விரக்தியில் உள்ளார்கள்.அதிகாரத்தில் பங்கு உள்ளதா என்று எடப்பாடி பழனிச்சாமிடம் நீங்கள் கேட்டால் அவர் பாஷையில் திரும்பத் திரும்ப என்று சொல்கிறார் நீங்கள் மீண்டும் அவரிடம் கேளுங்கள்.
எப்படிப்பட்ட கூட்டணி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள் அவற்றை எதிர்கொள்ளும் தகுதியும் ஆற்றலும் எங்கள் முதலமைச்சருக்கு உள்ளது. மக்கள் இந்த ஆட்சியை அங்கீகரிக்கிறார்கள் . முதலில் மோடி அமித்ஷா என்று ஒன் மேன் ஷோ காட்டுவார்கள். தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் என்னால் ஒன்னும் செய்ய முடியாது என்று விரக்தி உச்சத்திற்கு போய் மக்கள் உங்களை பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்கிறார் நாங்களும் சொல்கிறோம் மக்கள் உங்களை பார்த்துக் கொள்வார்கள்.”தமிழகம் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது என்ற அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ”அகில இந்திய அளவில் கிரைம் ரேட் பாருங்கள், உலகத்தில் எல்லாம் குறைவாகத்தான் உள்ளது ஆனால் நடக்கவே இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. மணிப்பூரில் நடப்பதை எல்லாம் பார்ப்பதில்லையா அவர். பகல்காம் தாக்குதலுக்கு சில நாட்கள் முன்பு நேரில் சென்று ஆய்வு செய்து ஒரு துப்பாக்கி சத்தம் கூட கேட்காது என்று சொல்லி சென்றவர் அமித்ஷா என்ன நடந்தது. அதைக் கேட்க யோக்கியதை இல்லை.
எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தை தொடர்ந்து திமுக செயல்படுத்தி வருகிறது. இந்துத்துவா மதவாத சக்திகளுக்கு மாற்று சக்திகள் இல்லை எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட தத்துவம். ஆண், பெண் சமத்துவம், பாலின சமத்துவத்தை நோக்கி செல்கிறோம் இந்த தத்துவம் உங்களிடம் இல்லை அதனால் உங்களால் உள்ளே வர முடியாது என்றார்.”
தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்குமா திமுக அரசு – எடிப்பாடி பழனிச்சாமி கேள்வி?