Homeசெய்திகள்அரசியல்ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார்

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார்

-

- Advertisement -
kadalkanni

ஆந்திராவில் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார்.

ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து விஜயவாடாவில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக ஒருமனதோடு தேர்வு செய்தனர். அதனை பவன் கல்யாண் முன்மொழிந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் வழிமொழிந்தனர்.

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார்

அதனை அடுத்து கூட்டணி கட்சி தலைவர்கள் ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் அப்துல் நசீர், ஆட்சி அமைக்கும் படி சந்திரபாபு நாயுடுவிற்கு அழைப்பு விடுத்தார். ஆந்திராவில் நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் பதவியை இன்று ஏற்கவுள்ளார். இன்று காலை 11.30 மணி அளவில் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் முதலமைச்சர் பதவியை ஏற்கவுள்ளார்.

நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்த கருத்து திருப்திகரமாக இல்லை – மா.சுப்பிரமணியன்! (apcnewstamil.com)

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பல மாநில முதலமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட எராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். விஜயவாடா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

MUST READ