பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்- அதிமுக தலைமை
பாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி விட்டது. அண்ணாமலை ஓராண்டாகத் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா பற்றி பா.ஜ.க. விமர்சித்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிமுக தலைமை, 2 கோடி கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. கட்சித் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேற கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பொதுச்செயலாளரே இறுதி முடிவு எடுப்பார் என்றும், கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் இறுதி முடிவு எடுக்கும் வரை அதிமுக நிர்வாகிகள் அமைதி காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.