spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்"போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளம்" - எடப்பாடி பழனிசாமி!

“போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளம்” – எடப்பாடி பழனிசாமி!

-

- Advertisement -

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், போதைப்பொருள் புழக்கமுமே திமுக அரசின் உண்மை அடையாளங்களாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

edappadi palanisamy

வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்வதாகவும், போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை என்றும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,  திமுக ஆட்சியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது என சாடியுள்ளார். இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துவதாகவும், இது மிகுந்த கவலை அளிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு தமது கடும் கண்டனத்தை பதிவு செய்வதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு திமுக முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

MUST READ