Homeசெய்திகள்அரசியல்சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும்: செல்வப் பெருந்தகை சவால்

சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும்: செல்வப் பெருந்தகை சவால்

-

- Advertisement -

சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும்: செல்வப் பெருந்தகை சவால்
சீமானுக்கு துணிச்சல் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா அசன் மௌலானா ஏற்பாட்டிலான நிவாரணப் பொருட்கள் அடங்கிய லாரிகளை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதில், ஆயிரம் சட்டைகள், ஆயிரம் லுங்கிகள் ஆயிரம் டீஷர்ட்டுகள், நைட்டி, துண்டுகள், உள்ளாடைகள் மற்றும் நான்காயிரம் குழந்தைகளுக்கான துணிமணிகள் நூறு மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவணனில் இருந்து வயநாட்டிற்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.

முதல் தவணையாக 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் வழங்குவதாக அறிவித்துள்ளதை குறிப்பிட்ட செல்வப் பெருந்தகை, வருகின்ற 8ஆம் தேதி, தலைவர் ராகுல் காந்தியிடம் அதனை கொடுக்க இருப்பதாகவும் கூறினார்.

அதே போன்று எல்லா மாவட்டங்களிலும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் தலைவர்கள் முன்வந்து வயநாட்டு மக்களுக்கு என்னென்ன தேவையோ அதனை உடனுக்குடன் அனுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 கைதுக்கு எதிரான கெஜ்ரிவால் மனு தள்ளுபடி

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரன தொகையாக வழங்குவதாக அறிவித்திருப்பதையும் செல்வப் பெருந்தகை நினைவு கூர்ந்தார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லாத பிரதமரும் அவரது அமைச்சர்களும் வயநாட்டிற்கு வந்து பார்த்து எதையும் செய்ய மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை கூறினார்.

ராகுல் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்துக்கு பதில் அளித்த அவர்,

நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படாத காரணத்தாலேவா ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்களா என வினவிய செல்வப்பெருந்தகை, சீமானுக்கு தேர்தலில் நிற்க தைரியம் இல்லை என்றும் பதிலளித்தார்.

MUST READ