Homeசெய்திகள்அரசியல்‘திராவிட கட்சிகள் இருக்காது...’விஜயை வைத்து சொன்னதை செய்கிறதா பாஜக? அண்ணாமலை சந்திப்பு உண்மையா?

‘திராவிட கட்சிகள் இருக்காது…’விஜயை வைத்து சொன்னதை செய்கிறதா பாஜக? அண்ணாமலை சந்திப்பு உண்மையா?

-

- Advertisement -

விஜய் மாநாட்டில் யார் எதிரி என்பதை தெளிவாகக் கூறிவிட்டார். அடுத்து அதிமுகவுடன் கூட்டணியா? என்கிற பேச்சு கிளம்பி வந்த நிலையில் அதிமுக தலைவர்களோ தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என அறிவுறுத்தி வந்தபிறகு விஜய் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறி விட்டது.அதிமுகவுடன் கூட்டணி இல்லை - தவெக அறிவிப்பு

இதுகுறித்து திமுக ஆதரவாளர் சூர்யா சேவியர் தனது எக்ஸ் தளப்பதிவில், ‘‘அதிமுகவோடு கூட்டணி இல்லை என்ற விஜயின் தற்போதைய அறிவிப்பின் உள்ளடக்கம் என்ன?

அண்ணாமலை எம். ஜி. ஆர், ஜெயலலிதா அம்மையாரை அருவருப்பாகப் பேசியும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லாமலேயே மோடியும், அமித்ஷாவும் இருவருக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தொடங்கியது ஏன்?

அதிமுக வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பது தான் அதனுடைய பிரதானமான திட்டம். அத்திட்டம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதா? ஓபிஎஸ், தினகரன் போட்டியிட்ட தொகுதிகளில் கூடுதலாகவும், பிற தொகுதிகளில் 5 சதம் என்ற வகையிலும் பாஜக கூட்டணிக்கு அதிமுக வாக்குகள் பதிவானது.

விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை ஆனால் அதிமுகவோடு கூட்டணி என்றும் சொல்லவில்லை. அதிமுக தலைமையும் ஊடகங்களும் அதிமுகவோடு கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்தன.

விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்பது அதிமுக வாக்குகளை பாஜகவால் பெற முடியவில்லை. விஜய் மூலம் பெற வேண்டும் என்பதுதான் அதன் திட்டம். அதிமுகவை முற்றிலும் துடைத்தெறிய வேண்டும் என்பதுதான் பாஜகவின் இலக்கு. அதற்கு பல வழிகளை மேற்கொள்கிறது.

அதிமுகவில் இருந்து மேலும் பல குழுக்களை உருவாக்கி விஜய்யோடு இணைப்பது தான் அதன் திட்டம். எஸ் பி வேலுமணி,கே. பி.முனுசாமி, ஒரத்தநாடு வைத்தியலிங்கம் ஆகியோரை அதிமுகவிலிருந்தும், ஓபிஎஸ்சிடம் இருந்தும் வெளியேற்றுவது தான் பாஜகவின் தற்போதைய இலக்கு. https://x.com/suryaxavier1/status/1858445799614763204

2026 தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு திராவிட கட்சி இருக்காது என்ற பாஜகவின் கருத்தை இதோடு இணைத்து பாருங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சூர்யா சேவியர் சொல்லும் அரசியல் கருத்து உண்மையோ, பொய்யோ? அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் முற்றிலும் பொய்யானது. இந்த பதிவில் விஜய் அண்ணாமலை சந்தித்து இருப்பதாக அவர் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட பொய்யான புகைப்படமாகும். உண்மையான புகைப்படமல்ல.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி, புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி நடிகர் விஜய்யை சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படம். இந்த போலியான புகைப்படத்தை வெளியிட்டுள்ள சூர்யா சேவியரை பலரும் கண்டித்து வருகின்றனர்.

MUST READ