Homeசெய்திகள்அரசியல்விமானம் மூலம்  கோவை சென்றடைந்தார் மு க ஸ்டாலின்

விமானம் மூலம்  கோவை சென்றடைந்தார் மு க ஸ்டாலின்

-

- Advertisement -

விமானம் மூலம்  கோவை சென்றடைந்தார் மு க ஸ்டாலின்திமுக முப்பெரும் விழாவில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

வெற்றியை கொண்டாடும் வகையில், திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சிறப்பான வெற்றிக்கு திமுகவை வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விமானம் மூலம்  கோவை சென்றடைந்தார் மு க ஸ்டாலின்

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி ,தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்க்சிஸ்ட் ,கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம். காதர் மொகிதின் ,மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ. ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.

விமானம் மூலம்  கோவை சென்றடைந்தார் மு க ஸ்டாலின்

விழா நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் போலீசார் விழா நடைபெறும் மைதானத்தில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர்  உதவியுடன் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பேராதரவை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு!

திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் கோவை சென்று அடைந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது. கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

MUST READ