சட்டமன்ற உறுப்பினர்களை ஹனிட்ராப் வீடியோவில் சிக்க வைத்து மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக அரசு உயர் மட்ட விசாரணையைத் தொடங்க உள்ளது.
கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா சட்டமன்றத்தில், தானும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த குறைந்தது 48 அரசியல்வாதிகளும் இதுபோன்ற ஹனிட்ராப்பில் சிக்க வைக்கும் முயற்சிகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் சித்தராமையாவின் நெருங்கிய கூட்டாளியான ராஜண்ணா, ஹனிட்ராப் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக விவரித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.
முன்னதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி, அடையாளம் தெரியாத அமைச்சரவை சகாக்கள் மீது இரண்டு பேர் ஹனிட்ராப்பில் சிக்க வைக்க முயற்சித்தனர். ஆனால் தோல்வி அடைந்தது. சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னல், ராஜண்ணாவை ஹனிட்ராப் பொறிக்கு இலக்காகக் குறிப்பிட்டார். இதுகுறித்து அமைச்சர் ராஜண்ணா தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், முறையான புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார். இந்த சம்பவங்களை திட்டமிட்டு நடத்தியவர்களை விசாரித்து அம்பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவை அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய அவர், ”எனக்கு எதிராக ஒரு மோசடி முயற்சி நடத்தப்பட்டது. கடந்த பல நாட்களாக நடந்து வரும் ஹனிட்ராப் குறித்த விவாதத்தை தெளிவுபடுத்துகிறேன். மத்திய, மாநில அளவிலான தலைவர்கள் 48 பேரின் ஹனிட்ராப் வீடியோ சிடிக்கள் இருக்கிறது” என ராஜண்ணா கூறி இருப்பது கர்நாடக மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா ஒரு சிடி தொழிற்சாலை என்று பலர் கூறுகிறார்கள். இந்த விஷயம் இதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. தேசியத் தலைவர்களுக்கும் ஹனிட்ராப் வீடியோ விவகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நான் எழுத்துப்பூர்வமாக புகார் அளிப்பேன். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். சுமார் 48 மாநில மற்றும் மத்திய அளவிலான தலைவர்களின் வீடியோக்கள் ஹனிட்ராப்பில் சிக்கியுள்ளது.
இது நமது மாநிலத்திற்கு மட்டும் சார்ந்த்ததல்ல. இதில், பல்வேறு தேசிய அளவிலான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் உள்ளனர். இந்த சிடி விவகாரத்தில் 48 பேர் உள்ளனர். பொது வாழ்வில் இது நடக்கக்கூடாது. அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். மக்கள் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சரை நான் வலியுறுத்துகிறேன். அதில் யார் இருக்கிறார்கள்? அது என்ன? விசாரணை மூலம் எல்லாம் வெளிவர வேண்டும். இது ஒரு தொற்றுநோய், இதை பொதுவில் அம்பலப்படுத்த வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, ராஜண்ணா எழுத்துப்பூர்வமாக புகார் அளிப்பார். எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டால், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுவேன்” என்று அவர் தெளிவுபடுத்தினார். இதற்கிடையே, ராஜராஜேஸ்வரி நகர் பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவிடம், “என் மீதான வழக்கு குறித்து நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அப்போது, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எழுத்துப்பூர்வ புகார் அளிக்குமாறு பரிந்துரைத்தார்.
இடைக்கால உரையை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், ”விசாரணை என்னவாக இருக்கும் என்பதை அறிவிக்க வேண்டும். பலர் ஹனிட்ராப்பில் சிக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் கோரினார்.