மக்களவை தேர்தல் தோல்விக்கு பின், ஐந்து மாதங்களில் மகாராஷ்டிரா தேர்தலில், பா.ஜ.க, வியூகத்தை மாற்றி உள்ளது. முஸ்லீம் வாக்குகள் எதிராக, பாஜக பல இடங்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ‘இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்’என்ற புதிய முழக்கத்தை எழுப்பினார். இந்த முழக்கம் அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்த முழக்கம் பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை நிரப்பியது. இந்த முழக்கம் இந்து வாக்காளர்களைக் கவர்ந்தது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘பிரிந்து கிடந்தால் இந்துக்களை அழித்து விடுவார்கள்” என்ற கோஷத்தை முழங்கினார்.
பாஜகவின் இந்த இரண்டு முழக்கங்களும் இந்தத் தேர்தலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மஹாவிகாஸ் அகாதி கூட்டணிக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம் மதத் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனை அடுத்தே பாஜகவின் இந்த முழக்கம் உரக்க எழுப்பப்பட்டது. தேசிய உலமா கவுன்சில், மகாராஷ்டிரா மற்றும் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் சஜ்ஜாத் நோமானி, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீடு மற்றும் காவல் படைகளில் ஆட்சேர்ப்பில் முன்னுரிமை போன்ற கோரிக்கைகளை எழுப்பினார்.
பாஜக இந்த கோரிக்கைகளை இந்துகளுக்கு எதிரானது என்றும், இந்து ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, கலாசார மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பா.ஜ.க. ‘ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்’ என்ற முழக்கத்தை பிரதமர் மோடி பல பேரணிகளில் திரும்பத் திரும்பக் கூறினார்.
பாஜகவின் இந்தப் பிரச்சாரத்திற்கு ஆர்எஸ்எஸ்ஸும் ஆதரவளித்தது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தனது வருடாந்திர தசரா உரையில் இந்து ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.
வங்கதேசத்தில் இந்து சமூகம் மீதான தாக்குதல்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மோகன் பகவத் வலியுறுத்தினார். இதனால், மகாராஷ்டிராவில் முஸ்லீம் எதிர்ப்புகளை உருவாக்கி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் உத்தியை பாஜக கையாண்டது. அதன் தாக்கம் மகாராஷ்டிராவின் முடிவுகளில் தெளிவாகத் தெரிந்தது. இந்த முறை பாஜக அமோக வெற்றியைப் பதிவு செய்தது. மகாயுதி கூட்டணி 230 இடங்களைப் பெற்றுள்ளது.
இந்த இந்து ஒற்றுமை உத்தியை மகா விகாஸ் அகாடி எதிர்க்கவில்லை. ராகுல் காந்தியிடம் அதற்கான உத்தி இல்லை. ஓபிசி கணக்கெடுப்பு குறித்து அவர் பேசுகிறார், ஆனால், ஓபிசி பிரிவினர் பல முக்கியமான பொறுப்புகளில் உள்ளனர். அவர்களுள் இந்தியாவின் பிரதமரும் அடக்கம்,
இம்முறை தேர்தல் முடிவுகளின் சிறப்பு என்னவென்றால், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியில் அங்கம் வகித்த எந்த முக்கிய எதிர்க்கட்சி ஆவதற்கு போதுமான இடங்களைப் பெறவில்லை. உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு 20 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 16 இடங்களும், சரத் பவார் கோஷ்டியின் என்சிபிக்கு 10 இடங்களும் கிடைத்துள்ளன. மறுபுறம், பாஜக 132 இடங்களையும், ஷிண்டே குழுவின் சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் என்சிபி 41 இடங்களையும் பெற்றுள்ளன. இதன்மூலம் இந்த தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஆளும் கட்சி படுதோல்வியை கொடுத்துள்ளது.