- Advertisement -
8 கொலை, 8 தோல்வி எடப்பாடியே! கமுதியில் பரபரப்பு போஸ்டர்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூர்பம் எடுத்துள்ள நிலையில் கமுதியில் எடப்பாடி பழனிசாமியை மோசமாக கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் எடப்பாடி பழனிசாமியை மோசமான முறையில் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் எடப்பாடியே, எடப்பாடியே,எட்டு கொலை, எட்டு தோல்வி எடப்பாடியே… கழகத்தின் களங்கமே, தமிழகத்தின் சரித்திரமே, துரோகத்தின் முழு உருவமே, பொதுக் கழிப்பறை போல் மூஞ்சி உள்ள உனக்கு பொதுச் செயலாளர் பதவி ஒரு கேடா? வெளியேறு வெளியேறு அதிமுக கட்சியை விட்டு வெளியேறு! என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஆறு பேர் பெயரிட்ட இந்த போஸ்டர்கள் கமுதி முழுவதும் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.