திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்து 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக சரித்திரத்தில் இடம்பெற்றார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலும், அதிமுக கூட்டணியில் நல்ல தம்பியும், பாஜகவில் பொண்.வி பாலகணப்பதியும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் சந்தர் , பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தமிழ்மதி என ஆறுமுனை போட்டி நிலவியது.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற தேர்தலில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி உள்ளடக்கிய திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி , பொன்னேரி, மாதாவரம், ஆவடி, பூந்தமல்லி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 14,17,812 வாக்குகள் பதிவாகி இருந்தன.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/mutharasan-tweet/90015
பதிவான வாக்குகள் அனைத்தும் திருவள்ளுர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று 34 சுற்றுகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் முதல் சுற்றில் இருந்து 34வது சுற்று வரை தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த சசிகாந்த் செந்தில் அவர் மொத்தமாக 7,96,956 வாக்குகள் பெற்றார்.
பாஜக வேட்பாளர் பொண்.வி பாலகணபதியை விட சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்கு வித்தியாசத்தில் தமிழ்நாட்டில் இதுவரை யாரும் பெற்றிறாத அதிக வாக்கு வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக, தேமுதிக ,நாம் தமிழர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்தார்.
பாஜக வேட்பாளர் பொண்.வி பாலகணபதி 2,24,801 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் கு. நல்லதம்பி 2,23,904 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் 1,20,838 வாக்குகள் பெற்று நான்காவது இடத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தமிழ்மதி நோட்டா பெற்ற 18,978 வாக்குகளை விட 13,810 குறைவான வாக்குகள் பெற்று 6-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
அதாவது மொத்தம் பதிவான 14,17,812 வாக்குகளில் சசிகாந்த் செந்தில் மட்டும் 7,96,956 வாக்குகள் பெற்று 56.2 சதவீதம் வாக்கு பெற்றுள்ளார்
சசிகாந்த் செந்தில் தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான பிரபு சங்கரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.