இந்தியாவிற்காக செய்யப்படும் விஷயங்களில் என்றும் அரசியல் செய்வதை முதலமைச்சர் விரும்ப மாட்டார். தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர் அமைச்சர் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடியில் அமைய உள்ள கப்பல் கட்டுமான நிறுவனம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொழில்துறை வரலாறு காணாத வகையில் வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் உலக நாடுகளின் முதலீட்டாளர்கள் படையெடுத்து வருகின்றனர். தமிழ்நாடு மென்பொருள், வாகன உற்பத்தி, காலனி உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு, வெளிநாட்டு பயணங்களில் தமிழ்நாடு தனித்துவமான முக்கியத்துவத்தை அளிக்கும் வகையில் செமி கண்டக்டர் உற்பத்தி கொண்டுவரப்பட்டது. நீல பொருளாதரத்தில் கடல் சார் உற்பத்தியில் பெரிய இலக்கு இருந்து வந்தது. இன்று பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வந்துள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றைப் பொறுத்தவரை பண்டைய சேரன், பாண்டியன், சோழ காலத்தில் இருந்து கடல்சார் வணிகத்தில் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது கூட பூம்புகாரில் கடலுக்கடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து வரலாறு தொடங்குகிறது என்பதை முதலமைச்சரின் கூற்றை நிரூபிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துடன் கொச்சின் சீப்யார்டு லிமிடெட் மற்றும் மசாகோன் டாக் கடல் கட்டுமானம் லிமிடெட் என்ற இரு நிறுவனத்துடன் தலா 15,000 கோடி என 30,000 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இந்தியாவின் பாதுகாப்பு என்பது நாட்டின் காவல் அரண் தான், தென்னிந்தியாவில் குறிப்பாக தென் தமிழ்நாட்டில் இப்படி ஒரு கப்பல் கட்டுமான நிறுவனம் அமைவது, உலக அரசியல் சூழலில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் அமையும்.
இந்த இரு நிறுவனங்கள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும். விரைவில் தூத்துக்குடியில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
வெகு விரைவில் தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கை வெளியிடப்பட உள்ளது. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்தான பின், ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட அனுமதி பெற வேண்டி இருக்கிறது, அது விரைவாக கிடைக்க பெரும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் மேலாக இருக்கிறது. நாங்கள் மிகைப்படுத்தி சொல்லவில்லை. இந்தியாவிற்காக செய்யப்படும் விஷயங்களில் என்றும் அரசியல் செய்வதை முதலமைச்சர் விரும்ப மாட்டார். தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர். வெளிநாடு முதலீடா? அல்லது வெளிநாட்டில் முதலீடா என்ற விஜய் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு கண்டவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது, என தெரிவித்தார்.
ஹச் 1பி விசா குறித்து ஒரு அறிவிப்பை அமெரிக்க வெளியிட்டுள்ளது. இதுபோன்ற உலக அளவிலான சூழல்களை சிந்தித்து தான் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் திறன்வாய்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவது, அதேபோல் ஜெர்மனி, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் தேவைப்படும் மனித வளத்தை தயார்படுத்தும் வகையில் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் பின்னலாடை பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு பெரிய படுத்திருக்கிறோம். நல்ல தீர்வு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். விவேகமாக சிந்திக்கூடிய பெரிய முதலீட்டாளர்களால் தமிழ்நாட்டை தாண்டி சிந்திக்க முடியாது.
தமிழ்நாட்டுக்கான போட்டி மற்ற மாநிலங்களுடன் அல்ல, மற்ற நாடுகளுடன் தான். கடந்த 4 ஆண்டுகளில் பல முன்னணி நிறுவனங்களுடன் 1010 மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,31,571 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 34 லட்சம் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் தொழில் துறையில் அரசியல் ஆக்க நினைப்பது சரியல்ல. தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் பொறுப்புணர்வுடன் இவ்வகாரத்தை அணுக வேண்டும். எந்த காலத்திலும், தவறான தகவலை கொடுத்ததில்லை. பரந்தூர் விமான நிலையம் சூப்பர் நிலையில் உள்ளது, நிச்சயம் நல்லபடியாக வரும், என தெரிவித்துள்ளாா்.
இந்தப் போர் முழக்கம் உங்களை தூங்க விடாது… துரத்திக் கொண்டே வரும் – நாகையில் விஜய் ஆவேசம்