“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் மக்களை உறுப்பினர்களாக சேர்க்கும் “ஓரணியில் தமிழ்நாடு”என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 3.7.2025 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, 10.7.2025 அன்று திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “ஓரணியில் தமிழ்நாடு”என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார்.

மேலும், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழக தகவல் தொழில்நுட்ப அணியால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை (War Room) 12.7.2025 அன்று கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் மக்களை உறுப்பினர்களாக சேர்க்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இணைக்கப்பட்ட மக்களின் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் (16.7.2025) “ஓரணியில் தமிழ்நாடு”என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. நிவேதா எம். முருகன், மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் திரு. சூர்யா, மயிலாடுதுறை கிழக்கு ஒன்றியச் செயலாளர் திரு. முருகமணி ஆகியோர் உடனிருந்தனர். கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்று “ஓரணியில் தமிழ்நாடு”என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் இதுவரை 1,35,43,103 நபர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.