எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும், எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.மதுரை எஸ்.எஸ்.காலனியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், “அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் அணுகுண்டு விழுந்தது போல இருக்கிறது திமுக ஆட்சி. சட்டம் ஒழுங்கில் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஸ்டாலின். சோழர் காலம் பொற்காலம் என சொல்வது போல ஸ்டாலின் காலம் வேதனையின் காலம் என மக்களின் மனதில் என்றும் நினைவில் இருக்கும்” என்றார்.
அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமித்ஷா பேசியது குறித்த கேள்விக்கு,
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்க தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தி, மக்களை திசை திருப்பினாலும், எடப்பாடி பழனிசாமி தெளிவாக இருக்கிறார், நாங்களும் தெளிவாக இருக்கிறோம்” என பதிலளித்துள்ளாா்.