Homeசெய்திகள்அரசியல்வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…

வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…

-

- Advertisement -

தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில் வக்ஃபுகளைப் பாதுகாப்போம், அரசியலமைப்பைப் பாதுகாப்போம், எனும் தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் துணை பொது செயலாளர் ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அற்றிய உறையில், ”வக்பு சட்டம் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி சட்டம் நிறைவேற்றப்பட்டது. முதலில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பினர். அங்கேயும் எதிர்ப்பு தெரிவித்த போது அவர்கள் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் கிட்டதட்ட 300 பேர் எதிர்த்து வாக்களித்தும் இந்தச் சட்டத்தை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. கொஞ்சம் கூட அரசியல் நாணயம் இல்லாமல் இஸ்லாமியர்களின் சொத்தில் தலையிடும் இந்தச் சட்டத்தை அடவாடியாவ நிறைவேற்றி இருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தப் பதினோரு ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் மீது சட்டத்தின் பெயரால் பல்வேறு தாக்குதலை நிகழ்த்தி வருகிறார்கள்.

நிறைவேற்றும் சட்டங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் இஸ்லாமியர்களை ஒடுக்குகின்ற நடவடிக்கை போன்று தோன்றும், அது உண்மை தான். ஆனால், உள்ளீடாகப் பார்த்தால் இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல். இந்திய அரசியலை மதச்சார்பின்மைக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று இருதுருவ அரசியலாக மாற்ற வேண்டும்.

வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…

இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு கட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்த விசிக, நாளை திருச்சியில் லட்சக்கணக்கான சிறுத்தைகளை திரட்டி மதச்சார்பின்மை காப்போம் என்ற உரத்து முழக்கமிட இருக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தின் உயிர் மூச்சாக இருப்பது மதச்சார்பின்மை. பாஜகவின் கண்ணை உறுத்துவது மதச்சார்பின்மை தான். மதங்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்பது மட்டுமல்ல, எந்த ஒரு மதத்திற்கும் எதிராக இயங்கக் கூடாது என்பது தான் மதச்சார்பின்மை. இந்தியாவில் எந்த மதத்தின் தனிச்சொத்து நிர்வாகத்திலும் தலையிடாத அரசு, வக்பு தனிச்சத்து நிர்வாகத்தில் ஏன் தலையிடுகிறது. இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினராக நியமிப்போம் என்று சட்டம் இயற்றுவது எவ்வளவு மோசமான எதேச்சை அதிகாரபோக்கு.

இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல். தமிழ்நாட்டில் ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்த போது அது இஸ்லாமியர்கள் கிருத்துவர்களுக்கு எதிரானது என்று எல்லோரும் சொன்ன போது, அது தலித்துகளுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்து. வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. வகுப்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதை விட அதைவிட கடுமையாக அரசாங்க சட்டத்தை குறி வைத்து தாக்குகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி நிறைவேற்றப்பட்ட விவசாயச் சட்டத்தை திரும்பப் பெற வைத்தார்கள். ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்தால் அவர்களை பணிய வைக்க முடியும், ஆணவத்தை வீழ்த்த முடியும். தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம்.

இதையெல்லாம் திசை திருப்பக் கூடிய வகையில் பாஜக காய்களை நகர்த்துகிறது. அதற்கு அதிமுக துணை போகிறது. தேர்தல் ஆதாயம் கருதி சில கட்சிகள் கணக்கு போடுகிறது. அவர்கள் அனைவரையும் ஒரு சேர மக்களிடத்தில் அம்பலப்படுத்துவோம் என்றார்.வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது,”உலகத்தில் நாளை என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத காலத்தில் இருக்கிறோம். இஸ்லாமியராக மாண்புடன் வாழ்வது சவாலாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நான் இந்தியனாக நிரூபித்துக்கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. பாஜக அமைச்சர் ஒருவர் ராணுவ வீரர் சோபியா குரேஷியை தீவிரவாதிகளின் சகோதரி என்று குறிப்பிட்டதை பிரதமர் கண்டிக்கவில்லை. அவரை பதவி நீக்கம் செய்யவில்லை.

வக்பு சொத்து இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்தச் சொத்து இறைவனக்கானது. இந்து, கிறிஸ்துவ, சீக்கிய மத அறக்கட்டளைகளை அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் நடத்துகிறார்கள். அது தான் இயற்கையானது. ஆனால் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த என்னை ஒரு கோவிலின் அறங்காவலராக பதவி கொடுத்தால் நானே ஏற்றுக்கொள்ளமாட்டேன். பகல்ஹாமில் இந்தக் கொடுமையைச் செய்த தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ஏதாவது இஸ்லாமியர்கள் கூறினார்களா?

பகல்ஹாமில் வந்து கொன்றவர்கள் எவ்வாறு உள்ளே வந்தார்கள்? அந்த நான்கு பேரையும் கைது செய்து தூக்கில் போடாத அரசு என்ன அரசு என்று இஸ்லாமியர்கள் கேட்கிறார்கள். காஷ்மீரில் மூன்றரை லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளார்கள். முழுப் பொறுப்பும் உள்துறை அமைச்சரிடம் உள்ளது. அங்கு ஏன் காவலுக்கு ஆள் இல்லை என்று சொல்ல வேண்டாமா? ஆனால் அவர் தமிழ்நாட்டில் வந்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார், நமக்கு மிகப்பெரிய சவால் உள்ளது. தமிழகம் தனித் தீவாக உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தால் மட்டுமே  நமக்கு பாதுகாப்பு ஏற்படும். அதிக தியாக வரலாறு கொண்டது தான் இஸ்லாம் சமூகம்” என பேசியுள்ளாா்.வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…

பின்னர் பேசிய திமுக துணை பொது செயலாளர் ராசா, ”வக்பு வாரியம் குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்ற நாங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து எங்களின் கருத்துக்களை பதிவு செய்து, அவர்கள் அழைத்து வந்த சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து, நாடாளுமன்ற நிலைக்குழுவில்  தவிடுபொடி ஆக்கி எல்லாம் முடித்த பிறகும், நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது உங்களுக்கு வேடிக்கையாக இல்லையா வெட்கமாக இல்லையா என்று அமித்ஷாவிடம் நேரடியாகக் கேட்டேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த வக்பு சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று ஒரு மனதாக தீர்மானம் கொண்டுவந்தார்கள். தமிழக சட்டப்பேரவையின் சிந்தனை உங்களுக்கு எதிராக இருக்கிறது.

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மிகப்பெரிய சிலை வைத்திருக்கிறீர்களே, சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிர்ணயிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது, அதன் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல். இந்த குழுவில் நேரு, அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் இருந்தனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு எப்படி சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது, எல்லாருக்கும்  கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்கள் மூன்று இஸ்லாமியர்கள். அவர்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று சொன்னது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்துவிட்டோம், அடுத்தது தமிழ்நாடு தான் என்று மதுரையில் அமித்ஷா கூறுகிறார். அட மடையர்களே, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிராவில் நீங்கள் பார்த்தது தனிமனிதர்கள். தமிழ்நாட்டில் பார்ப்பது தத்துவத்துடன் கலந்த தனிமனிதன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் தத்துவமாக இயங்குகிறார்கள். இந்த தத்துவத்தை தோற்கடிப்பதற்கு உன் பாட்டனால் கூட முடியாது. வக்பு சட்ட திருத்தம் ரொம்பக் கேவலமாக இருக்கிறது. ஒரு கிறுக்கன் சட்டம் எழுதினால் கூட இப்படி எழுத மாட்டான். வக்பு சட்டத்தைக் கொண்டு வந்த அமித்ஷாவும் மோடியும் காட்டுமிராண்டிகள். அதிகாரத்தை  அயோக்கிய தனத்தை எதிர்த்து போராடுகின்ற துணிச்சல் மிகுந்த தலைவராக இந்தியாவில் மதச்சார்பின்மை அரசியல் சட்டத்தையும் தூக்கி பிடிக்கின்ற முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை நாங்கள் குரல் கொடுப்போம் கூறியுள்ளாா்.வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், ”வக்பு சட்டத்தை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை இஸ்லாமிய சமூகம் சரியாக உணரவில்லை என்று கருதுகிறேன். குடியுரிமை திருத்த சட்டம் வந்தபோது இந்தியா முழுவதும் எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற்றது. அதைவிட எழுச்சியாக வஃப்பு சொத்துக்களை பாதுகாக்க இஸ்லாமிய சமூகம் எழுந்து இருக்க வேண்டும். ஏன் என்றால் வக்பு என்பது புனிதமானது. வக்பு சொத்துக்களை ஒரு முறை வழங்கி விட்டால் அதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது.

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாசிச பாஜக அரசு இந்த சட்டத்தை நடு இரவில் நிறைவேற்றினர். வக்பு சட்டத்திற்கு எதிராக இன்னும் வலுவாக நம்முடைய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஜீலை 6 தேதி மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இதே கோரிக்கை வலியுறுத்தி கூட்டம் நடைபெற உள்ளது” என தெரிவித்தள்ளாா்.

சோலியை முடித்த அண்ணாமலை!  அதிமுக – பாஜக கூட்டணி காலி!

MUST READ