spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

-

- Advertisement -

தமிழறிஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அரசாக தமிழக அரசு உள்ளதெவும் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும்  - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள் 9-பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி, நூலுரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்துகொண்டு, நூலுரிமை தொகையாக தலா 10 லட்சம் ரூபாயை தமிழறிஞர்கறுக்கு வழங்கினார்.

we-r-hiring

விழாவில், தமிழறிஞர்கள் முனைவர் ஆறு.அழகப்பன், இராமலிங்கம் என்கின்ற எழில் முதல்வன் இருவருக்கும் வாழுங்காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும் மறைந்த தமிழறிஞர்கள் முனைவர்.சோ. சத்தியசீலன், முனைவர்.மா.ரா. அரசு, பாவலர் ச.பாலசுந்தரம், முனைவர்.க.ப. அறவாணன், முனைவர். க.த.திருநாவுக்கரசு, முனைவர்.இரா. குமரவேலன்,கவிஞர் கா.வேழவேந்தன் ஆகியோரது குடும்பத்தினரிடம் நூலுரிமை தொகையாக தலா 10 லட்சம் ரூபாயை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

தொடர்ந்து, விருதாளர்களுடன் அமைச்சர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டர் பின்பு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், தமிழ் அறிஞர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருவதாக கூறினார். அவர்களின் நூல்களை நாட்டுடமையாக்கி, தலா 10 லட்சம் வழங்கியுள்ளதன் மூலம் தமிழார்வமுள்ள பலரும் ஊக்கம் அடைவார்கள் என அவர் தெரிவித்தார்.

தமிழ் அறிஞர்களுக்கு மரியாதை செய்யும் வகையிலும் தமிழ் மொழியை செம்மைப்படுத்தும் வகையிலும் முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ் வளர்ச்சித் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

MUST READ