
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 55வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று (மே 10) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

மீண்டும் ரீரிலீஸ் ஆகும் ரஜினியின் இண்டஸ்ட்ரி ஹிட் படம்!
முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்திருந்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில், கலீல் அகமது, லலித் யாதவ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், மிட்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
“மணிகண்டன் கொண்டாடப்பட வேண்டியவர்”… மனதாரப் பாராட்டிய பாடகி சின்மயி!
சென்னை அணியின் பதீரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 15 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.