Homeசெய்திகள்விளையாட்டுநமிபியா அணியை வீழ்த்தி ”சூப்பர் 8” சுற்றுக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி!

நமிபியா அணியை வீழ்த்தி ”சூப்பர் 8” சுற்றுக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி!

-

- Advertisement -

நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தநிலையில் நேற்று இரவு (இந்திய நேரப்படி) நடைபெற்ற 34வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நமிபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் தலைமையிலும் நமிபியா அணியானது ஜெராட் எராஸ்மஸ் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ்சில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழைக் குறுக்கிட்டதால் ஆட்டமானது 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நமிபியா அணியின் கேப்டன் ஜெராட் எராஸ்மஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 11 ரன்களிலும் ஜாஸ் பட்லர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 31 ரன்களும் ஹரி புரூக் 47 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அணியானது 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 122 ரன்கள் குவித்தது.

பின்னர் சிறிது நேரம் மழைக் குறுக்கிட்டதால் நமிபியா அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நமிபியா அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மைக்கேல் வான் லிங்கன் 33 ரன்களில் வெளியேற நிக்கோ டேவின் 18 ரன்கள் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து களமிறங்கிய களமிறங்கிய டேவிட் வைய்ஸ் 27 ரன்களும் ஜெராட் எராஸ்மஸ் 1 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அணியானது 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகனாக ஹரி புரூக் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ரன் ரேட் அடிப்படையில் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

 

 

 

MUST READ