
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நாட்டின் 10 நகரங்களில் மொத்தம் 48 போட்டிகள் நடத்தப்படவிருக்கிறது.
செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
அதன்படி, தர்மசாலா, டெல்லி, லக்னோ, கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, புனே, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு ஆகிய 10 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில், பெங்களூரு, அகமதாபாத், சென்னை, தர்மசாலா, லக்னோ, மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தலா ஐந்து போட்டிகள் நடைபெறுகின்றன.
ஹைதராபாத்தில் மட்டும் மூன்று போட்டிகள் நடத்தப்படவிருக்கிறது. முதல் அரையிறுதி போட்டி மும்பையிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவிலும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, நவம்பர் 19- ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
“பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை”- பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!
இதனிடையே, உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கோப்பையை பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா அறிமுகம் செய்து வைத்தார்.