Homeசெய்திகள்விளையாட்டுவிடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்- ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை தொடங்கியது!

விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்- ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை தொடங்கியது!

-

- Advertisement -

 

காத்திருந்த ரசிகர்கள்
Twitter Image

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வரும் மே 6- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.30 PM மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்ரல் 03) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. பலம் வாய்ந்த சென்னை, மும்பை அணிகள் மோதுவதால் டிக்கெட் வாங்க அதிகளவில் ரசிகர்கள் திரண்டுள்ளனர். குறிப்பாக, நேற்றிரவு முதல் விடிய விடிய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த போட்டியைக் காண பெண் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும், அவர்களுக்கென்று தனி வரிசை ஒதுக்கப்பட்டு, ரூபாய் 1,500, ரூபாய் 2,000, ரூபாய் 2,500 டிக்கெட்டுகள் கவுண்ட்டர்களின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல், 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி, 4 போட்டிகளில் தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

அதிக முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ள அணி என்ற பெருமையைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐ.பி.எல். தொடரை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ