Homeசெய்திகள்விளையாட்டுஐ.பி.எல். தொடரில் இருந்து சாம்பா விலகல்!

ஐ.பி.எல். தொடரில் இருந்து சாம்பா விலகல்!

-

 

ஐ.பி.எல். தொடரில் இருந்து சாம்பா விலகல்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாம்பா விலகியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த சாம்பா, நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரரான சாம்பா, அடுத்தடுத்து வரவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தவிருப்பதால், அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். இது குறித்த அறிவிப்பை அவரது மேலாளர் வெளியிட்டுள்ளார்.

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் எவை?- விரிவான தகவல்!

கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடிய அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஸ்வின், சாஹல் இருப்பதால் சாம்பாவின் விலகல், அந்த அணியை பெரிதும் பாதிக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ