Homeசெய்திகள்விளையாட்டு6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!

-

 

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!
Photo: BCCI

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை எடுத்தது.

இந்திய அணி தரப்பில், இஷான் கிஷன் 55 ரன்களையும், சுப்மன் கில் 34 ரன்களையும், சூர்யக்குமார் யாதவ் 24 ரன்களையும் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள், 36.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. இதனால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

‘உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?’- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடரில் 1-1 என்ற கணக்கில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் முன்னிலையில் உள்ளனர்.

MUST READ