Homeசெய்திகள்விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறல்!

-

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறல்!
Photo: ICC

லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 151 ரன்களை எடுத்து, திணறி வருகிறது.

செர்பியாவில் இந்திய குடியரசுத் தலைவரைச் சந்தித்த நடிகை சமந்தா!

முதல் இன்னிங்ஸில் 121.3 ஓவர்களில் 469 ரன்களை எடுத்து, ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஸ்மித் 121 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 163 ரன்களையும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணி தரப்பில், முகமது ஷமி, ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அசதியுள்ளனர்.

இந்திய அணி தரப்பில், ரோஹித் சர்மா 15 ரன்களையும், சுப்மன் கில் 13 ரன்களையும், புஜாரா, விராட் கோலி தலா 14 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 48 ரன்களையும் எடுத்துள்ளனர்.

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!

ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய அணியின் வீரர்கள் திணறி வருவதால், இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

MUST READ