spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு"- வானிலை ஆய்வு மையம் தகவல்!

“16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

-

- Advertisement -

 

மழை

we-r-hiring

தமிழகத்தின் கோவை, சேலம், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று (நவ.06) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை!

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சேலம், ஈரோடு, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று (நவ.06) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!

சென்னையில் ஒருசில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

MUST READ