ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் சுமார் 600கோடி ரூபாய் வரை பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தில் லாபம் சம்பாதித்துள்ளதும், அவர்களது விவரங்களைச் சேகரிக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
“எந்தெந்த நிறுவனங்கள்? தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது?”- விரிவான தகவல்!
பொதுமக்களிடம் இருந்து ரூபாய் 2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இவ்வழக்கில் தொடர்புடையதாக 21- க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, துபாயில் தலைமறைவாக இருந்து வந்த உரிமையாளர் ராஜசேகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கொடுத்த ரெட்கார்னர் நோட்டீஸ் மூலமாக துபாய் நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் குற்றவாளியிடம் பணம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான ஆர்.கே சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
ஆர்.கே சுரேஷ் அளித்த ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் சம்மன் அளிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ராஜசேகர், மோசடி செய்த பணத்தில் சுமார் 200 கோடி ரூபாய் வரை துபாயில் சொகுசு ஹோட்டல்கள் உட்பட பல்வேறு தொழிலில் முதலீடு செய்திருப்பது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் உடனடியாக துபாயில் இருக்கும் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வரும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர்.
போக்குவரத்து தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு!
இதுமட்டுமின்றி, ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்த பலரும் லாபம் எடுத்துவிட்டு சென்றதும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எடுத்துக்காட்டாக ஆருத்ரா நிறுவனத்தில் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்துவிட்டு ஒரு வருடத்தில் 3லட்சம் ரூபாய் வரை லாபம் எடுத்துவிட்டு, அதன் பின்னர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யாமல் லாபத்துடன் சென்றுள்ளனர்.
அப்படி அதிக லாபம் பார்த்த நபர்களின் விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தும் பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதேபோல், சுமார் 600 கோடி ரூபாய் வரை லாபம் பார்த்த பொதுமக்களுக்கு நோட்டீஸ் சென்றுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.