Homeசெய்திகள்தமிழ்நாடுசுயேச்சையாகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு!

சுயேச்சையாகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு!

-

 

சுயேச்சையாகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு!

வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தி.மு.க.வுக்கு கருணாஸ் ஆதரவு!

நடிகர் மன்சூர் அலிகான், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவை வழங்கும் போது டெபாசிட் தொகை கட்டாதது நியாபகத்திற்கு வரவே, தொகையைக் கட்டிவிட்டு வருவதாகக் கூறிவிட்டு திரும்பிச் செல்ல முயற்சித்தார். பிறகு பணத்தைச் செலுத்துங்கள் என தேர்தல் அலுவலர் கூறியதைத் தொடர்ந்து, வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க முயற்சித்த போது, 100 மீட்டருக்கு அப்பால் செய்தியாளர்களைச் சந்திக்குமாறு காவல்துறை மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு மன்சூர் அலிகான், நான் எங்கு சென்றாலும் தடைப் போடுகிறீர்கள்; ஏன் இங்கு செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாதா? என் கேள்வி எழுப்பினார்.

சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், “பலாப்பழம், கிரிக்கெட் பேட், லாரி ஆகிய 3 சின்னங்களில் ஒன்றை கேட்டுள்ளோம்” என்றார்.

MUST READ