Homeசெய்திகள்தமிழ்நாடு'அமைதியான நதியினிலே ஓடம்'....என்றென்றும் நினைவில் செவாலியர்! 

‘அமைதியான நதியினிலே ஓடம்’….என்றென்றும் நினைவில் செவாலியர்! 

-

- Advertisement -

 

'அமைதியான நதியினிலே ஓடம்'....என்றென்றும் நினைவில் செவாலியர்!
File Photo
கடந்த 1928- ஆம் ஆண்டு அக்டோபர் 1- ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை கிராமத்தில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி கணேசன். சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக, கடந்த 1952- ஆம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, அந்த நாள், தெனாலி ராமன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ஆண்டவன் கட்டளை, தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு, தேவர் மகன், பசும்பொன், ராஜராஜா சோழன், நவராத்திரி உள்ளிட்ட 288 திரைப்படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசனின் பெரும்பாலான படங்கள் 200, 300 நாட்களைக் கடந்த திரையரங்குகளில் ஓடினர். இதில், தெலுங்கில் 9 படங்களிலும், இந்தி, தெலுங்கில் தலா 2 படங்களிலும் அடங்கும்.

சிவாஜி கணேசனின் நடிப்பு மட்டுமின்றி, அவரது வசனம், நடனம் என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பின்னாளில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த காலத்திலேயே மூன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து திரையுலகினரைத் தன் பக்கம் ஈர்த்தவர்.

அந்த வகையில், ‘தெய்வ மகன்’ படத்தில் மூன்று வேடங்களிலும், ‘நவராத்திரி’ படத்தில் ஒன்பது கதா பாத்திரங்களிலும் சிவாஜி காட்டிய வேறுபாட்டை வேறு யாரிடமும் காண முடியாது. தாய் பாசம், வீரம், விரக்தி, உணர்ச்சி, கோபம் என பாவனைகளையும்,  நடிகர் சிவாஜியை போல் நயம்பட வெளிப்படுத்தியவர் வேறு யாரும் இல்லை.

நடிப்பின் பல்கலைக்கழகமான சிவாஜி ஏற்காத வேடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து வேடங்களிலும் நடித்து அசத்தியிருப்பார்.  படித்தவன், கல்வியறிவற்றன், காவல் அதிகாரி, காதலன், திருடன், கணவன், வழக்கறிஞர், நீதிபதி, மருத்துவர், நோயாளி, மாற்றுத்திறனாளி, ராணுவ வீரர் என நீள்கிறது அவர் நடித்த வேடங்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் வசனம் இன்றளவும், நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அந்த காலத்தில் முன்னணியில் இருந்த அனைத்து நடிகைகளுடனும் நடித்துள்ளார். தனது அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் மற்றும் ரஜினிகாந்துடன் நடிகர் சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.
நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், அவர் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் என்றும் மக்கள் நினைவில் இருந்து நீங்காதவை. உதாரணமாக, ஆண்டவன் கட்டளை படத்தில், ‘அமைதியான நதியினிலே ஓடம்…. என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழக அரசு கடந்த 1962- ஆம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 1966- ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும், 1984- ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் மத்திய அரசு சிவாஜி கணேசனுக்கு வழங்கிப் பாராட்டியது. அதைத் தொடர்ந்து, இந்திய திரைத்துறையில் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது, கடந்த 1996- ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

பின்னர், 1995- ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு நடிகர் சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருதை வழங்கி கௌரவித்தது. இந்த விருது உலக அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.

ஒரு பக்கம் திரைத்துறையில் பயணித்தாலும், மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்த நடிகர் சிவாஜி கணேசன், பெரியாரின் திராவிடர் கழகத்தில் கடந்த 1944- ஆம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்திலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக்கட்சியையும் தொடங்கியவர், கடைசியாக, வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளத்திலும் பயணித்தார். எனினும், திரைத்துறையில் சாதித்தது போல் நடிகர் சிவாஜி, அரசியலில் ஜொலிக்கவில்லை. அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது.

அரசியல் தலைவர்களுடனும், முன்னணி நடிகர்களுடன் நெருங்கி பழகிய நடிகர் சிவாஜி கணேசன், எளிமைக்கு உதாரணம். அவரது பணிவு, சுய ஒழுக்கம் ஆகியவை அவரது முன்னேற்றத்திற்கு முக்கியமானவை.

தனது வாழ்நாள் முழுவதும், மக்களுக்காகவும், திரையினருக்காகவும் வாழ்க்கை அர்ப்பணித்த சிவாஜி கணேசன், தனது 72வது  வயதில் காலமானார். ஆண்டுதோறும் ஜூலை 21- ஆம் தேதி சிவாஜி கணேசனின் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

MUST READ