அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று (ஜன.19) விசாரணைக்கு வந்த போது, நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஆதாரை பிறந்த தேதி ஆவணமாக பயன்படுத்த முடியாது – EPFO அறிவிப்பு
அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று (ஜன.19) காலை 11.00 மணிக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, “அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளைப் பிரிக்க விதிகளில் இடமுள்ளதா?, அ.தி.மு.க. பொதுக்குழு சிறப்பு தீர்மானத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரோஜாவிற்கு ஆருடம் கூறிய கிளி ஜோசியர்!
உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.