
ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா, கிளி ஜோசியரிடம் ஆருடம் கேட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா…. லேட்டஸ்ட் அப்டேட்!
ஆந்திர மாநிலம், நகரியில் தனது அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா மற்றும் அவரது கணவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி பங்கேற்றனர். அப்போது, அங்கிருந்த கிளி ஜோசியர் ஒருவர், அமைச்சர் ரோஜாவிடம் ஆருடம் கூறினார். ரோஜா எடுத்துக் கொடுத்த சீட்டில் மதுரை மீனாட்சி அம்மன் புகைப்படம் இடம் பெற அதற்கு அவருக்கு மக்கள் செல்வாக்கு தொடரும் என்றும், ஆறு வயது முதல் 60 வயது நபர்கள் வரை ரோஜாவிற்கு ஆதரவு தருவார்கள் என கிளி ஜோசியர் கூறினார்.
உறியடி விஜயகுமாரின் ‘ஃபைட் கிளப்’….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லட்சுமி கடாச்சம் இருப்பதால், அவர் நினைக்கும் காரியங்கள் வெற்றி பெறும் என அமைச்சர் ரோஜாவிற்கு கிளி ஜோசியர் ஆருடம் கூற, இதனை ரோஜாவும், அவரது கணவர் ஆர்.கே.செல்வமணியும் கேட்டு ரசித்தனர்.