
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் அண்ணா குறித்த விமர்சனத்தால் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

பயணிகள் அச்சம்- நடுவானில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
இந்த சூழலில், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைமை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், கூட்டணி நிலைப்பாட்டை அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ள நிலையில், வேறு யாரும் கருத்துத் தெரிவிக்காதீர்கள். கூட்டணி குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்க வேண்டாம். பா.ஜ.க.வுக்கு எதிராகவோ, கூட்டணி குறித்து போஸ்டர் ஒட்டுவது, சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பழனி கோயிலுக்கு கைப்பேசி, படப்பதிவுக் கருவி எடுத்துச் செல்லத் தடை!
கூட்டணி பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என மாவட்டச் செயலாளர்கள் மூலம் நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தியுள்ளது.


