குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்க நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குற்றால அருவிகளில் தண்ணீரின் சீற்றம் காரணமாக நேற்று முதல் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் வரத்து அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை என்ற போதிலும் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்புகருதி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது தண்ணீரின் சீற்றம் குறைந்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.இதேபோல் இதுநாள் வரை தண்ணீரின்றி வறண்டு இருந்த பழைய குற்றால அருவியிலும் தற்போது தண்ணீர் விழத் துவங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அருவிகளில் குளிக்க மீண்டும் தடைவிதிக்க வாய்ப்புள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.