
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு விண்ணப்பப்பதிவுத் தொடங்கியுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு!
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 07- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று (நவ.01) தொடங்கியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். அத்துடன், டெட் ஆசிரியர் தேர்வின் இரண்டாம் தாளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
தகுதியானவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவுச் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் நவம்பர் 30- ஆம் தேதி கடைசி நாளாகும்.