Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

-

 

பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதையடுத்து, அண்ணாமலை வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சூலூர் பகுதியில் இரவு 10.00 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாகவும், காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி காவல்துறையினருடன் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், வாக்குவாதம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சூலூர் காவல்துறையினரிடம் தேர்தல் அதிகாரி புகார் அளித்திருந்தார்.

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இதையடுத்து, வேட்பாளர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினர் மீது 143, 341 பிரிவுகளில் சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது.

MUST READ