!["அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/mk56666-1-1.jpg)
‘இந்தியாவுக்காகப் பேசுகிறேன்’ என்ற தலைப்பில் (Speaking4india) Podcast மூலம் பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் என்ற பா.ஜ.க.வின் வாக்குறுதி என்ன ஆனது?
தி.மு.க.வுக்கு சீமான் திடீர் ஆதரவு!
இந்தியாவுக்காக எல்லோரும் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது, சில பேரின் நலனாக சுருங்கிவிட்டது. இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மக்களாட்சி மகத்துவத்திற்கும் பக்கம் வரும் போது அதைத் தடுக்க தி.மு.க. முன்வரும்.
“காவி மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
குஜராத் மாடல் எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது அது குறித்து பேசுவதே இல்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.