Homeசெய்திகள்தமிழ்நாடு"பா.ஜ.க.வின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“பா.ஜ.க.வின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

-

 

"பா.ஜ.க.வின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

மாநில கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்த முயன்று அரசியல் லாபம் தேடும் பா.ஜ.க.வின் எண்ணம் எடுபடாது என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“மக்கள் அனைவருக்கும் தெரிவது ‘ஊழல் மோடி’ தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி- மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதலமைச்சரிடம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன்; பதில் சொல்ல முடியாமல் திணறினார்!

அறிக்கை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டேன்; பதில் சொல்ல முடியாமல் நழுவினார்!இப்போது எஜமானர்களாம் உங்களிடமே வந்தேன்; 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேடையில் நம் கேள்விகளை உரக்கக் கேட்டேன்; பதில் சொல்ல திராணியின்றி என் மீது தனிப்பட்ட விமர்சனம் தான் வைத்தார்!

மு.க.ஸ்டாலின் என்னைப் பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். நான் கேட்ட ஒரு கேள்விக்காவது அவருக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி இருந்ததா? இல்லை. ஏனெனில், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டைக் காக்கத் தவறிய, பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய ஒரு ஆட்சி தான் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி.

ஒரு மக்களவை உறுப்பினரின் அடிப்படைக் கடமையான MPLADS நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த தி.மு.க. கூட்டணி எம்.பி.க்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்?

“ஏழைகளுக்கு கொடுக்கவே தேர்தலில் போட்டி”- வேட்பாளர் பாரிவேந்தர் பேட்டி!

இவர்கள் ஒருபுறம் எனில், நம் மாநிலத்தின் உரிமைகளை கிஞ்சற்றும் மதிக்காத, நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கும் பாரதிய ஜனதா அரசு மறுபுறம். மதத்தின் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே கொள்கையாக வைத்துக்கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில், குறிப்பாக அ.தி.மு.க.விடம் ஈடேறாது.

அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே, வரும் 19- ஆம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதும், பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதும் ஒன்று தான்; அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும். நம் மாநிலத்தின் உரிமைகளை மறுக்கும் தேசிய கட்சிகளையும், 38 எம்.பி.க்கள் இருந்தும் மவுனியாக இருந்து மாநில உரிமைகளை தாரைவார்த்த தி.மு.க.வையும் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள், மக்களவையில் உங்களின் குரலாக, நம் தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

“மக்கள் அனைவருக்கும் தெரிவது ‘ஊழல் மோடி’ தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் ஆளுமைகள் கட்டமைத்த வளமிக்க தமிழ்நாட்டை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கை நெறிகொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி சார் பாதையில் வழிநடத்த உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டைஇலை சின்னத்திலும், முரசு சின்னத்திலும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ