
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.
அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சலிட்ட நபர்!
பன்னாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அதிகாலை 01.30 மணி முதல் போர்டிங் கார்டு வழங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், தகவல் சேவைப் பெற முடியவில்லை. இதனால் தாய்லாந்து, கொழும்பு, துபாய், பாரீஸ் உள்ளிட்டப் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் பயண அட்டை மற்றும் உடைமைகளைப் பதிவுச் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
“கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது”- நடிகர் ரஜினிகாந்த்!
30- க்கும் மேற்பட்ட விமான நிலைய அதிகாரிகள் கைகளால் பதிவுச் செய்யும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமத்திற்கு பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரிச் செய்யப்பட்டதால், விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றனர்.