Homeசெய்திகள்தமிழ்நாடுதொழிலதிபரை ஏமாற்றினேனா?- செல்லூர் ராஜு மறுப்பு!

தொழிலதிபரை ஏமாற்றினேனா?- செல்லூர் ராஜு மறுப்பு!

-

 

தொழிலதிபரை ஏமாற்றினேனா?- செல்லூர் ராஜு மறுப்பு!
Video Crop Image

தொழிலதிபர் ஒருவரை தான் ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமை மாநாடு – சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “40 ஆண்டு கால அரசியலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், என் நேர்மையைக் கெடுக்கும் வகையில் செய்தி வந்துள்ளது. மோசமான செய்தி என் குடும்பத்தையும், என்னையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரே இது குறித்து விளக்கம் அளிக்க சொன்னார். 10 ஆண்டுகாலம் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்துள்ளேன்.

அரசுக்கு எதிராக தொழிலாளர்களிடம் கோஷங்களை எழுப்பி வரும் மாவோயிஸ்ட்டுகள்!

தேர்தல் நேரத்தில் இது போன்று புகார் கூறப்பட்டுள்ளதில் ஏதோ பின்புலம் உள்ளதாகத் தெரிகிறது. என் நேர்மையும், நாணயமும் வேறு ஒருவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிகாரிகள், நிபுணர்கள் குழு தான் டெண்டரை இறுதிச் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ