பொங்கல் பண்டிகையின்போது சி.ஏ முதனிலைத் தேர்வை நடத்தும் முடிவை ஒத்திவைக்க வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாட்டின் மிகவும் கொண்டாடப்படும் கலாச்சார திருவிழாவான பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ. முதனிலை தேர்வை நடத்தும் ICAI-இன் முடிவு, நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும் என கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் மரபுகள் மற்றும் பிராந்திய சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தை இந்த உணர்வில்லாத செயல் பிரதிபலிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், சிஏ முதனிலைத் தேர்வு தேதியை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மத்திய அரசு அது கூறுவது போல் தமிழர் உணர்வுகளை உண்மையாக மதிக்கும் பட்சத்தில், தேர்வை மாற்றியமைக்க மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். நமது கலாசார பன்முகத்தன்மையைக் குலைக்கும் செயல்களை நிறுத்திவிட்டு, பெரும்பான்மையான தமிழர் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டிய நேரம் இது என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.