spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டு, ஆம்பூரில் லேசான நில அதிர்வு!

செங்கல்பட்டு, ஆம்பூரில் லேசான நில அதிர்வு!

-

- Advertisement -

 

செங்கல்பட்டு, ஆம்பூரில் லேசான நில அதிர்வு!
File Photo

கர்நாடகா மாநிலம், விஜயபுராவில் இன்று (டிச.08) காலை 06.52 மணியளவில் 3.1 ரிக்டர் அளவுக்கோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுக்கோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. காலை 07.39 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் சீரானது!

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரைச் சூழ்ந்து பொதுமக்கள் வாக்குவாதம்!

நேபாளம், அசாம், மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் நேற்று (டிச.07) நில அதிர்வு பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ