Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளைச் சந்திக்கும் ஜெ.பி.நட்டா!

சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளைச் சந்திக்கும் ஜெ.பி.நட்டா!

-

- Advertisement -

 

சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகளை நேரடியாகச் சந்திக்கும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தவுள்ளார்.

“வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி”- நடிகர் விஜய்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் பிஸியாக உள்ளனர். குறிப்பாக, வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில், வரும் பிப்ரவரி 11- ஆம் தேதி அன்று பா.ஜ.க.வின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெ.பி.நாட்டா சென்னை வருகிறார். அன்றைய தினம் மதியம் 01.00 மணியளவில் பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தல் பணிக்குழுவுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவைக் குறித்தும் ஆலோசிக்கவுள்ளார்.

“கண்டா வரச் சொல்லுங்க” என போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க., தி.மு.க.!

அதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களையும் ஜெ.பி.நட்டா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ.பி.நட்டாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

MUST READ