Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பத்தூரில் 200 கிராம் மெத்தம்பெட்டமைன் போலீசார் பறிமுதல் - இருவர் கைது!

அம்பத்தூரில் 200 கிராம் மெத்தம்பெட்டமைன் போலீசார் பறிமுதல் – இருவர் கைது!

-

- Advertisement -

 

சென்னை அம்பத்தூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் மெத்தம்பெட்டமைனை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் பானு நகர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் வேலைய பாண்டியன் ரோந்து சென்றுள்ளார். அப்போழுது அந்த வழியே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்துள்ளனர்.காரில் இருந்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பாபு மற்றும் ரமேஷ் என்ற இளைஞர்களிடம் மேற்கொண்ட சோதனையில், பெங்களூரில் இருந்து வாங்கி வந்த 200 கிராம் மெத்தம்பெட்டமைன் சிக்கியது.

உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார்,  அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து விற்பனைக்கா சிறிய பொட்டலங்களாக வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட 200 கிராம் மெத்தம்பெட்டமைன் விலை சுமார் 20லட்சம் இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.  சமீபத்திய காலமாக போதை பொருள் விவகாரம் தமிழகத்தில பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அம்பத்தூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது அம்பலமாகியுள்ளது.

MUST READ