spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருடர்கள் போல தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்துகிறார் பிரதமர் மோடி - மு.க.ஸ்டாலின்

திருடர்கள் போல தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்துகிறார் பிரதமர் மோடி – மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

"சென்னையில் வரலாறு காணாத மழை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருடர்கள் போல தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்துகிறார் பிரதமர் மோடி என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது ‘தமிழ்ப்பற்றாளர்’ வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார். வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா?

வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

MUST READ