Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் சேவையில் நேரம் மாற்றம்!

கோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் சேவையில் நேரம் மாற்றம்!

-

- Advertisement -

 

டேராடூன்- டெல்லி இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!
File Photo

கோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் சேவையில் நேரம் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திமுக சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை 05.00 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 20642), காலை 07.25 மணிக்கும், மறுமார்க்கத்தில் மதியம் 01.40 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் (20641), மதியம் 02.20 மணிக்கும் புறப்படும். இந்த வந்தே பாரத் ரயில் சேவையின் நேரம் மாற்றம் வரும் மார்ச் மாதம் 11- ஆம் தேதி அமலுக்கு வரும்.

“தேவரை பற்றி அண்ணாமலை பேசுவது வரலாற்று திரிபு”- நடிகர் கருணாஸ் அறிக்கை!

திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுச் செல்லும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக வலைதளப் பக்கங்களை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ