சென்னையை அடுத்த மணலி சிபிசிஎல் நிறுவன ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
லாரி- பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு!
சென்னையை அடுத்த மணலியில் சிபிசிஎல் என்ற பெயரில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் எண்ணெய் கழிவுகள், கொசஸ்தலை ஆற்றிலும், எண்ணூர் கடலிலும் கலந்துள்ளது.
இதையடுத்து, சிபிசிஎல் நிறுவனத்தின் ஊழியர்கள், தமிழக அரசு சார்பிலான ஊழியர்கள் அதிநவீன இயந்திரங்களுடன்எண்ணெய் அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், சிபிசிஎல் நிறுவனத்தில் இன்று (டிச.16) காலை 10.00 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.